கோவை, செப்.19- மத்திய அரசின் புதிய மோட் டார் வாகன சட்டத்தின் அதிகப் படியான அபராதத்தை கண்டித்து வியாழனன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. மத்திய பாஜக அரசு புதிய மோட்டார் வாகன திருத்தச் சட் டத்தை கடந்த ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இச்சட் டத்தின்படி சிறுசிறு விதிமீறல் களுக்குகூட கடுமையான அப ராதம் விதிக்கப்படுகிறது. மேலும், அமலாக்கப்பட்ட ஓரிரு நாட்க ளுக்குள் நேரிடையாக வாகன ஓட்டிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இத்தகைய பொது போக்குவரத்தை சீர்குலைக்கும் இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் புதிய மோட் டார் வாகன சட்டத்தை கண்டித் தும், அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவதை ரத்து செய்ய வலியுறுத்தியும் வியாழனன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆத ரவு தெரிவித்துள்ளது. இதன்ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. லாரி கள் வேலை நிறுத்தம் காரணமாக கேரளா உட்பட வெளி மாநிலங் களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் ஏராளமான பொருட் கள் தேக்கமடைந்துள்ளன.