சேலம், ஆக. 4 - குப்பை மேட்டில் குழி பறித்து மின் கம்பங்கள் மற்றும் அரங்குகள் அமைக் கப்பட்ட அரசு பொருட்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைத்தார். சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோட்டை மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதனை யொட்டி பல்வேறு பொழுதுபோக்கு அம் சங்களுடன் அரசுப் பொருட்காட்சி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள போஸ் மைதானத்தில் நடத்தி வந்தனர். இந்த ஆண்டும் ஆடிப் பண்டிகை துவங்கி யுள்ள நிலையில் 4 ஆம் தேதி அரசுப் பொருட்காட்சியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பொருட்காட்சி அமைந்த இடம் குப்பை மேடாக இருந்து தற்போது பொருட்காட்சி மைதானமாக மாறியுள்ளது. ஆனால், வழக்கமாக நடைபெறும் போஸ் மைதா னத்தில் தற்போது பழைய பேருந்து நிலை யம் தற்காலிகமாகச் செயல்பட்டு வருவ தால் அங்கு அரசுப் பொருட்காட்சி நடத்த முடியாது. அதனால் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைமேட்டில் அரசுப் பொருட்காட்சி நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டு குப்பைகளைச் சமப்ப டுத்தி பொருட்காட்சிகளுக்கான கடைகள், அரசு அரங்குகள், ராட்டினம் அமைக்கும் பணிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதனால் சேலம் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது. பொருட்காட்சிக்குக் குழந்தைகளும், பெரியவர்களும் வருவதால் எளிதாக நோய்த்தொற்று வரவும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லும் இடங்க ளுக்கு மட்டும் மண் சமப்படுத்தி உள்ளனர். மேலும் அரங்குகள் ராட்டிணங்கள் இவைகள் அனைத்தும் குப்பைகள் மேலே அமைக்கப்பட்டுள்ளதால் மழைக் காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரி வித்துள்ளனர். பொருட்காட்சி குப்பைமேட்டில் நடத்து வது தவறு என்றும், குப்பையின் ஆபத்தை மாவட்ட நிர்வாகம் உணராமல் செயல் பட்டு வருவதாகவும், குப்பை மேட்டில் வாயு வெளியேறித் தீப் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்னும் நிலையிலும், குப்பை யில் குழி பறித்து மின் கம்பங்கள் அமைத்து வருகிறார்கள். மழை வரும்போது அது நிற்க வாய்ப்பில்லை. திடீரென சாய்ந்து விடும். இதனால் பெரும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக சூழலியல் செயல் பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற குறைபாடுகளுடன் அமைக்கப்பட்ட பொருட்காட்சியை தமிழக முதல்வர் திறந்து வைத்திருப்பது பொது மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது.