கோவை, நவ. 6- கோவை மத்திய சிறையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.22 லட்சம் ஒதுக்கீட்டில் மேற் கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட் டிற்கு வெள்ளியன்று ஒப்படைக் கப்பட்டது. கோவை மத்திய சிறையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறைவாசிகளை சந்திக்க வாரம் மூன்று நாட்கள் உறவி னர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுமதி வழங்கப் படுகிறது. இவ்வாறு வரும் பார் வையாளர்கள் காத்திருக்கும் பகுதி யில் அவர்களுக்கான கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்தது. இதனை யடுத்து சிறைத்துறை அதிகாரி கள், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கழிப்பிடம் மற்றும் ஆழ் குழாய் குடிநீர் வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்தனர். இதனையேற்று பி.ஆர்.நடரா ஜன் எம்,பி., தனது தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ.14.22 லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய் தார்.
இதனையடுத்து கோவை மத்திய சிறையில் பார்வையாளர் கள் பயன்பாட்டிற்கான ஆண், பெண் கழிவறைகள், கழிவுநீர் தொட்டி மற்றும் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந் தது. இதனை மக்கள் பயன்பாட் டிற்காக ஒப்படைக்கும் நிகழ்வு வெள்ளியன்று கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறைத்துறை சரக தலைவர் ஜி.சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., பங்கேற்று நிறைவடைந்த திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைத்தார். இந் நிகழ்வில், கோவை சிறைத்துறை எஸ்.பி., ஆர்.கிருஷ்ணராஜ், சிபிஎம் கோவை மாவட்டக்குழு உறுப்பினர்் யு.கே.சிவஞானம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.