tamilnadu

அவிநாசி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திடுக

திருப்பூர், ஜூன் 4- அவிநாசி பழைய பேருந்து நிலையம் இருந்த இடம் நீதி மன்றத்துக்குச் சொந்தமானது என நில ஆவணங்கள் உறுதிப்படுத்தும் நிலையில், அங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட் டக்குழுக் கூட்டம் தியாகி பழனிச் சாமி நிலையத்தில் புதனன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாநில  செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்: அவிநாசி நகரில் பழைய பேருந்து நிலையம் செயல் பட்ட இடத்தில் தற்போது வணிக  வளாகம் கட்டுவதற்கு பேரூராட்சி  நிர்வாகம் ஆரம்ப கட்ட நடவடிக் கைகளை மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அதே சமயம் மேற்படி 35 சென்ட் இடம் நில ஆவணங்களின்படி 1912ஆம் ஆண்டில்  துணை நீதிமன்றம் செயல் பட்டு வந்துள்ளது தெரிகிறது. காலப்போக்கில் பேருந்து நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் பழைய பேருந்து நிலையம், ஒரு நிறுத்தமாக மட்டுமே பயன்பட்டு வருகிறது. அதேசமயம் தற்போது அவி நாசி நீதித்துறை நடுவர் மன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகிய வை சேவூர் சாலையில் வட்டாட் சியர் அலுவலக வளாகத்திலும், சார்பு நீதிமன்றம் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வேறொரு இடத்திலும் செயல்பட்டு வருகிறது. இதனால் வழக்கறிஞர்கள், பொது  மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன.

அவிநாசியில் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த கால் நூற்றாண்டு காலமாக நீதித்துறையினரால் எழுப்பப்பட்டு வருகிறது. எனினும் பொருத்தமான இடம் தேர்வு செய்ய  இயலாமல் இக்கோரிக்கை நிறை வேறுவதில் காலதாமதம் ஆகிவரு வதாக நீதித்துறை சார்ந்தோர் தெரி விக்கின்றனர். தற்போது பழைய பேருந்து நிலையம் இருந்த இடம் நீதித் துறைக்கு உரியது என நில ஆவ ணங்கள் உறுதிப்படுத்தும் நிலையில், அதன் அருகிலேயே கூடுதல் காலி இடமும் இருப்பதால் அங்கு அவிநாசி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் அமைக்க முடியும். போக்குவரத்து வசதியுள்ள இந்த  இடத்தில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் அமைந்தால் நீதித்துறை யினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே வணிக நோக்கில் வேறு பயன்பாட்டுக்கு கட்டிடங்கள் கட்டு வதை தவிர்த்து, அவிநாசி ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நீதித் துறையினரிடம் கலந்து பேசி உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு நீதிமன்ற வளாகம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கி, உடனடி யாக கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக்  கொண்டுள்ளது. இவ்வாறு கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் தெரிவித்துள் ளார்.