கோவை, ஆக.14- வெவ்வேறான இரு வழக்கில் நுகர்வோருக்கு மன உளைச்சல் மற்றும் அலைகழிப்பு ஏற்படுத்தியதாக எஸ்பிஐ இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் சோனி மொபைல் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் புதனன்று தீர்ப்பு வழங்கியது. எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் என்ற தனியார் நிறுவ னத்தில் கோவை புது சித்தாபுத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகரன் பாலிசி எடுத்துள்ளார். இதன் சேவை குறைபாட்டின் காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.50 ஆயிரத்துக்கான காப்பீட்டை நிறுத்த சொல்லியுள்ளார். ஆனால் பிரிமிய தொகையின் 2வது தவணையை சட்ட விரோதமாக வங்கியின் கணக்கிலிருந்து எந்தவித அனு மதியின்றியும் காப்பீட்டு நிறுவனம் எடுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாக வழக்கறிஞர் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் இதன் மேலாளருக்கு, ரூ.15 ஆயிரத்தை 9 சதவிகித வட்டி யுடனும், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் இரு மாதங்க ளுக்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதேபோல், கோவை உப்பிலிப்பாளையம் சேர்ந்த பிரீத்தி என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மொபைல்ஸ் மற்றும் சோனி இந்தியா பிரைவேட் லிமி டெட் ஆகிய நிறுவனத்தில் வாங்கிய மொபைல் போன், 6 நாட்களில் பழுதாகியுள்ளது. இதனையடுத்து புது மொபைல் அல்லது மொபைலின் தொகையை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் மொபைல் நிறுவனமும், சென்னை மொபைல் நிறுவனமும் எதனையும் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ள னர். இதனயடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மொபைலின் தொகையான ரூ.34,990 -யும், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரத்தை 9 சதவிகித வட்டியுடனும், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.