tamilnadu

பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்தது

ஈரோடு ,ஆக.9- பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி யன்று காலையில் 81 அடியை எட்டி யுள்ளது.  ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2  லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையின் நீர்  இருப்பு குறைவாகவே இருந்தது. இந்நிலை யில் கடந்த  ஆக.5 ஆம் தேதி முதல் பவா னிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பவானி ஆறு மற்றும் மாயாற் றின் வழியாக பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெள்ளியன்று காலை 8 மணி நிலவ ரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 63 ஆயிரத்து 261 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 81.24 அடியாக வும் நீர் இருப்பு 16.297 டிஎம்சியாக உள் ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக் காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 205 கன அடி நீர் திறக்கப் பட்டுள்ளது. வியாழனன்று காலை அணை யின் நீர்மட்டம் 70 அடியாக இருந்த நிலை யில் வெள்ளியன்று 81 அடியாக உயர்ந் துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது. 5 டிஎம்சி தண்ணீர் அணைக்கு வரத்தாகியுள்ளது.