tamilnadu

மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்

சேலம், மே 27-மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உறுதியளித்தார்.சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபன், தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை திங்களன்று துவக்கினார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில், வீதி வீதியாக நடந்து சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு  பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.முன்னதாக, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேறிஞர் அண்ணா சிலைக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வரின் பண பலம், அதிகார பலம் ஆகியவற்றையும் மீறி திமுகவிற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட திமுக மற்றும் தோழமை கட்சியினருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.மேலும், சேலத்தில் திமுகவிற்கு வாக்களித்ததால் பல கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை முடக்கி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் விநியோகத்தைமுறைப்படுத்தாவிட்டால் திமுக தலைமையில் மாபெரும்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரித்தார்.