கோவை, ஜூன் 11- கோவை நாடாளுமன்ற தொகு தியில் வெற்றி பெற்ற பி.ஆர்.நடரா ஜன் எம்.பி. கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதியில் செவ்வாயன்று நன்றி அறிவிப்பு பிரச்சாரம் மேற் கொண்டார். இத்தொகுதியில் பி.ஆர்.நடராஜன் எம்.பி.க்கு கூட் டணி கட்சியினர் மற்றும் பொதுமக் கள் உற்சாக வரவேற்பளித்தனர். திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யின் சார்பில் கோவை நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிட்ட பி.ஆர்.நடராஜன் பாஜக வேட் பாளரைவிட 1.79லட்சம் வாக்கு கள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக நன்றி அறிவிப்பு பயணம் மேற் கொண்டுள்ளார். இதன் ஒருபகுதி யாக தெற்கு சட்டமன்ற தொகுதி யில் நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. கோவை மாநக ராட்சி 25 ஆவது வார்டு, என்டிசி குடியிருப்பு முன்பிருந்து தொடங் கிய பிரச்சார இயக்கம் தெப்பக் குளம், 80 ஆவது வார்டு, தெலுங்கு வீதி மற்றும் 81,83,85,84,82 ஆகிய வார்டுகளில் நன்றி அறி விப்பு பிரச்சாரம் மேற்கொண்டு கோட்டைமேடு பகுதியில் நிறை வடைந்தது. இப்பகுதிகளில் பி.ஆர்.நடராஜன் எம்.பி.க்கு கூட் டணி கட்சிகளின் ஊழியர்கள் மற் றும் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர். இந்த பிரச்சார இயக்கத்தில் மதிமுக மாநகர் மாவட்ட செய லாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி, கோட்டை அக்கீம், மற் றும் திமுக சார்பில் மார்க்கெட் மனோகரன், சுரேஷ், விஜி, காங்கிரஸ் கட்சியின் பர்வேஷ், மோகன், கொமதேக தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சித்தார்த், ஐஜேகே கட்சியின் ஈஸ்வரன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மேற்கு நகர செயலாளர் பி.கே.சுகுமார், கிழக்கு நகர செய லாளர் என்.ஜாகீர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகி கள் ஏராளமானோர் பங்கேற்ற னர்.