தருமபுரி, ஜூன் 18- பெரியாம்பட்டி அரசு பள்ளி யில் உள்ள ஆசிரியர் காலிப்பணி யிடங்களை நிரப்பக்கோரி மாண விகள் வகுப்பை புறக்கணித்து பெரியாம்பட்டி-தருமபுரி சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், காரியமங் கலம் வட்டம், பெரியாம்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண விகள் பயின்று வருகின்றனர். இந் நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில்போதிய ஆசிரி யர்கள் இல்லை. இதனால் மாணவிகள் பாடத்தை படிக்க முடியாமல் சிரமமடைந்து வந் துள்ளனர். இந்நிலையில் ஆசிரி யரை நியமிக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கல் வித்துறை அதிகாரிகளிடமும் பெற்றோர்கள் புகார் அளித்த னர். ஆனால் ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப கல்வித்துறை அதி காரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த மாணவிகள் உடனடியாக ஆசி ரியரை நியமிக்க வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து பெரியாம் பட்டி -தருமபுரி சாலையில் மறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரியமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார், வட்டாட்சியர் கேசவமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளிடம் குறை களை கேட்டறிந்தனர். பின்னர் ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததின் அடிப்படையில் மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.