தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் வலியுறுத்தல்
சேலம், பிப். 24- அனைத்து மருந்துகளும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதி சங்கத்தின் சேலம் கிளையின் சார்பாக ஆண்டு பேரவை கூட்டமானது, மருந்து விற் பனை சங்க வளாகத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு சேலம் கிளைத் தலைவர் பிர தீப் தலைமை வகித்தார். செயலா ளர் விஜய் ஆனந்த் மற்றும் பொரு ளாளர் சி.சவுந்திரராமன் ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து விற்பனை சங்க மாநிலத் தலைவர் சத்தியநாராயணன், பொதுச்செய லாளர் பிரபாகர் தேவதாஸ், துணைப் பொதுச் செயலாளர் திலீப், இந்திய மருத்துவ சங்க கிளைச் செய லாளர் மருத்துவர் பிராங்க் கிருபா, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக இப்பேரவைக் கூட்டத்தில், மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயி ரம் வழங்க வேண்டும். அனைத்து மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சேலம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணி களை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து முடித்திட வேண்டும். விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், எட்டு மணி நேரம் வேலை நிர்ணயம் குறித்த தமிழக அரசின் அரசாணைக்கு நன்றியும் தெரிவிக் கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் ஏரா ளமான உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இப்பேரவையில் புதிய தலைவ ராக ஓ.எஸ். திலீப், செயலாளராக விஜய் ஆனந்த், பொருளாளராக செந்தில்குமார் துணை செயலாள ராக பழனி உள்ளிட்ட 52 பேர் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.