tamilnadu

img

ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிந்தனை அரங்கில் கருத்தரங்கம்

ஈரோடு, ஆக.7- ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிந்தனை அரங்கில் புதனன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் 15 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா வின் ஐந்தாம் நாள் (ஆக.6) மாலை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ் விற்கு, சண்முகா சால்ட், கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வி.ராஜ மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், ‘‘அளவுக்கு மீறினால்’’ என்ற தலைப்பில் நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், ‘‘தலை நிமிர் காலம்’’ என்ற தலைப்பில் ஜெகத் கஸ்பர் ஆகி யோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலத் தலைவர் த.ஸ்டா லின் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.