உடுமலை, ஆக. 28- உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலையில் கரும்பு அரவை நிறை வடைந்துள்ளது. உடுமலையில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கணியூர், குமரலிங்கம், நெய் காரபட்டி, பழநி மற்றும் ஆலைப்பகுதி என ஐந்து கோட்டப்பகுதி விவசாயிகளிடம் ஒப்பந்தமிடப்பட்டு அரவைக்கு கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை ஆலையின் அரவைப்பணி நடை பெறும்.ஆலையில் நாளொன்றிற்கு 1250 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்ட இயந்திரங்கள் ஆலையில் உள்ளன. இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக கடந்த 2016-17, 2017-18 இரண்டு ஆண்டு கள் கரும்பு அரவைப்பணிகள் நடைபெற வில்லை. கடந்த ஆண்டு பெய்த பருவமழை யால் அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிகள் மற்றும் ஆலை கட்டுப் பாட்டு பகுதிகளில் 3,750 ஏக்கரில் விவசாயி களிடம் அரவைக்கு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த மார்ச் 25ம்தேதி ஆலையில் பாய் லரில் இளம்சூடு ஏற்றும் பணியும் 30ஆம் தேதி முதல் கரும்பு அரவைப்பணியும் துவங் கியது. இந்த ஆண்டு ஆலையில் ஒரு லட் சத்து 26 ஆயிரத்து 733 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு இந்த ஆண்டிற்கான அரவை பணி நிறைவு பெற்றது.