tamilnadu

img

அரசாணை 92ஐ முறையாக அமல்படுத்தக் கோரி மனு அளிக்க வந்த மாணவர்கள் கைது

கோவை, ஜூலை 5- அரசாணை 92 ஐ அனைத்து கல்லூரி களிலும் அமல்படுத்தக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்திய மாணவர் சங்கத் தினரை, அனுமதியின்றி ஊர்வலமாக வந்ததாகக் காவல் துறையினர் கைது செய்தனர்.  அரசாணை 92 - ன் படி ஆண்டிற்கு இரண்டு இலட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர் களின் கல்வி கட்டணத்தை அரசே வழங்க  வேண்டும். இந்நிலையில் அரசாணை 92 ஐ அனைத்து கல்லூரிகளிலும் முறை யாக அமல்படுத்தக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் காவ்யா, கோவை மாவட்ட தலைவர் தினேஷ் ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெள்ளியன்று மனு அளிக்கச் சென்றனர்.  கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் இருந்து ஊர்வல மாக வந்த அவ்வமைப்பினரை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பி னருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற் பட்டது. இதையடுத்து ஐம்பதுக்கும் மேற் பட்ட மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.