tamilnadu

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து மாணவர்கள், மாதர் சங்கத்தினர் பிரச்சாரம்

கோவை, ஏப்.11-மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து கோவையில் மாணவர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர். நடராஜன்போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக வியாழனன்றுஇந்திய மாணவர் சங்கத்தினர் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் மத்திய அரசின் தவறான கல்விக் கொள்கையினால் ஏழை, எளியோருக்கு கல்வி எட்டாக்கனியாகி வருவது குறித்தும், கல்வி தனியார் மயமாக்கப்படுவது குறித்தும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும், இத்தகைய சீர்குலைவு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்தப் பிரச்சாரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தினேஷ்குமார், காவியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதேபோல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் வீடு, வீடாக சென்று பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் குறித்தும், அதை தடுக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

;