சபாநாயகர் தொகுதியின் அவலம்
மே.பாளையம், மார்ச் 14- தமிழக சபாநாயகர் தொகுதி யில் சேதமடைந்த பள்ளிக்கட் டிடம் புதுப்பிக்கப்படாததால், நான்காண்டுகளாக கிராம நூலகத் தில் ஒற்றை அறையில் மாணவர் கள் கல்வி பயின்று வரும் நிலை காணப்படுகிறது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள அன் னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கட்டாம்பள்ளி கிராமத்தில் கடந்த 1971 ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அதன் பழமை காரணமாக சிதிலமடைய துவங்கியது. அவ் வப்போது சிறிய அளவில் பூச்சு வேலைகள் செய்யப்பட்டாலும், கடந்த 2016 ஆம் ஆண்டு பள்ளி யின் சிமெண்ட்டாலான மேற் கூரை கீழே விழத்துவங்கியது. இத னையடுத்து பள்ளிக்கு வரும் சிறு வர், சிறுமியரின் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கிராம நூலகத்தில் தற்காலிகமாக பள்ளி குழந்தைகள் இடம் மாற்றப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே பள்ளிக்கு புதிய கட் டிடம் தேவை என சொக்கட்டாம் பள்ளி கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இச்சம்ப வத்திற்கு பின்னர் இது குறித்து பல முறை தொடர்புடைய அதிகாரி களிடம் வலியுறுத்தியும் பல னில்லை. இதனால், கடந்த நான் காண்டுகளாக இத்தொடக்கப் பள்ளி நூலக அறையிலேயே இயங்கி வருகிறது. இதனால், இப் பள்ளியின் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்தபடி உள் ளது. தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை என 34 மாணவ, மாணவியரும், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் என இரு ஆசி ரியர்கள் மட்டுமே உள்ளனர். இவர் கள்,அனைவருக்கும் சேர்த்து கற்ப் பிக்கவும், கற்றுக்கொள்ளவும், கழி வறை, குடிநீர் என எந்த அடிப் படை வசதிகளும் இல்லாத பத் திற்கு இருபதடி கொண்ட ஒரு நூலக அறையே பள்ளியாக இயங்கி வருகிறது.
மேலும், பள்ளி குழந்தைகள் மதிய நேர சத்துணவு சாப்பிட வும், கழிவறை மற்றும் குடிநீர் வச திகளுக்காகவும் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பழைய பள் ளிக்கு சாலையோரம் நடந்து வந் தாக வேண்டும். இந்த மாற்று ஏற் பாடு ஒரு சில வாரங்களோ அல்லது மாதங்களோ இருந்தால் பரவா யில்லை, ஆனால் நான்காண்டு களாக இந்த அவலம் தொடர்வ தாக வேதனை தெரிவிக்கும் ஊர் மக்கள், உடனடியாக இடியும் நிலையில் உள்ள பழைய கட்டி டத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர பள்ளிக்கல்வித்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தமிழக சட்ட மன்ற சபாநாயகர் பி.தனபால் துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.