பென்னாகரம், ஜூலை 13- தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களின் ரூ.8 ஆயிரம் கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என பென்னாகரம் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளனம் சார்பில் நடந்த வாயில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னா கரத்தில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளனம் சார்பில் வாயிற் கூட் டம் நடைபெற்றது. இந்த கூட் டத்திற்கு மத்திய சங்கத்தின் இணை செயலாளர் கே.வெங்கடா சலம் தலைமை வகித்தார். தரும புரி மண்டல பொது செயலாளர் சி.முரளி, துணை தலைவர் வி. மனோன்மணி, பென்னாகரம் கிளை செயலாளர் ஜே.தர்மராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் போக்குவ ரத்தை அரசு பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.8 ஆயிரம் கோடி பணத்தை உடனடியாக தொழிலாளர்க ளுக்குத் திரும்ப வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில் வஞ்சகம் செய்வதை உடனடி யாக கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளனத்தின் 14 வது மாநில மாநாட்டிற்கான கே.எம்.அரி பட் நினைவு ஜோதி பயணம் பென்னாகரம் அரசு போக்குவ ரத்து பணிமனை முன்பு இருந்து துவக்கி வைக்கப்பட்டது.