tamilnadu

img

அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை

ஈரோடு, ஜூலை 9- சத்தியமங்கலம் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள். 8 பாடப்பிரிவுகளில் 24 வகுப்புகள் நடை பெற்று வருகிறது. இதற்கு 7 நிரந்தர பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  ஆகவே போதுமான நிரந்தர பேராசிரியர் களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும் மாணவ மாணவியர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை. ஆகவே, கூடுதல் வகுப்பறைகளை  அமைத்திட வேண்டும். அறிவியல் பாட  வகுப்புகள் இன்னும் துவங்கப்படா மலே உள்ளது.  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில் இரண்டு வாரங்களாக மாணவர்கள் அமர இருக்கைகள் இல்லாததால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போதுமான இருக்கைகளுடன் கூடிய வகுப்பறைகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை கல்லூரி வழியாக இயக்க வேண்டும்.  கடம்பூர், தாளவாடி, மலைக்கிராம மாணவ, மாணவிகளுக்கு பெருமளவு உத வியாக இக்கல்லூரி இருந்து வருகிறது. அவர்கள் தங்கிப்பயில விடுதி வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளில் தற்காலிகமாக தங்கிப் பயில ஏற்பாடு செய்யவேண்டும்.  பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடி யின மாணவர்களுக்கு பெரிதும் உதவிக ரமாக துவங்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கேட்டு மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.