tamilnadu

உயர்மின்கோபுர பணியைத் தொடர்ந்தால் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

திருப்பூர், மே 22 – கொரோனா ஊரடங்கு உத்த ரவு அமலில் இருப்பதைப் பயன் படுத்திக் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் உயர்மின்கோபுரப் பணிகளைத் தொடர்ந்தால் விவ சாயிகளைத் திரட்டிப் போராட் டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரித்துள் ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகி கள் கூட்டம் வியாழனன்று சங்க  மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள்: விவசாயிகளின் இலவச மின் சாரத்தை ரத்து செய்ய வகை செய் யும், மத்திய மின்சார சட்டம் 2020 ஐ மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் கொரோனா நிதி உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயிகளின் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு அறைகூவல்படி வருகிற மே  27ஆம் தேதி திருப்பூர் மாவட்டத் தில் உடுமலை, தாராபுரம், ஊத்துக் குளி, மடத்துக்குளம், அவிநாசி ஆகிய மையங்களில் ஆர்ப்பாட் டம் நடத்துவது என தீர்மானிக் கப்பட்டது.

மேலும் விவசாயிகளின் விளை நிலங்களை பாதிக்கும் உயர்மின் கோபுர பணிகள், கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை புறக்கணித்து, திருப்பூர் மாவட்டத் தில் வேகமாக நடைபெறுகிறது. சேதாரமாகும் பயிர்களுக்கு உரிய  இழப்பீடு,  பாதிக்கப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் கணக்கிட்டு வழங்கிய வழிமுறையில் திருப்பூர் மாவட்டத்திலும் வழங்க வேண் டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கள் கடந்த ஆறு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதன் விளைவாக, கடந்த மார்ச் முதல் வாரத்தில் ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னதாக விவ சாயிகளையும், விவசாய சங்க நிர் வாகிகளையும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அழைத்து பேசினார். கோவை மாவட்டத்தை போன்ற கணக்கீட்டு முறை எடுத்து கொள்ளப்பட்டு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித் தார். 

அதற்கு மாறாக தற்போது உள்ள ஊரடங்கை பயன்படுத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு ஏதும் வழங்காமல் வேலை செய்ய பவர் கிரிட் நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து, அதற்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கி வருகிறது மாவட்ட நிர்வாகம். இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. உரிய இழப்பீடு கிடைக்காமல், வாழ் வாதாரம் இழந்து விவசாயிகள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் காங்கேயத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண் டார். தாராபுரம் வட்டத்தில் ஒரு விவசாயி குடும்பத்துடன் இழப்பீடு கேட்டு போராடிய போது 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினரை வைத்து அப்புறப் படுத்தி அவரது நிலத்தில் வேலை செய்து வருகிறார்கள். விவசாயிகள் எழுப்பும் நியாய மான கோரிக்கைகளைக்கூட மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க தயாரில்லாமல் தானடித்த மூப்பாக செயல்படுகிறது. ஆகவே, உயர் மின் கோபுர திட்டத்தால் நில மதிப்பு மற்றும் வாழ்வா தாரத்தை இழந்து தவிக்கும் விவ சாயிகளோடு மாவட்ட நிர்வாகம் முறையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அத்துடன் ஊரடங்கு காலத்தில் வேலை செய்வதை நிறுத்த வேண்டும். விவசாய நிலத் திற்குள் காவல்துறையை அனுப்பி  அச்சுறுத்துவதை கைவிட வேண் டும். ஏற்கனவே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தபடி சந்தை  மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்ளப்பட்டது. மாறாக, இந்நிலை தொடரு மானால் விவசாயிகள் கூட்டியக்க நிர்வாகிகள் கலந்து பேசி மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு  பாதிக்கப்பட்ட விவசாயிகளை திரட்டி போராட்ட நடவடிக்கை களை முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.