tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு

தருமபுரி, ஆக.16- தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதிக்கு தருமபுரியில் வெள்ளியன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மின்சார  வாரியத்தில் களப்பிரிவில் சுமார் 40 ஆயிரம்  காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சட்டப் படியான கூலி, பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஐடிஐ  படித்தவர்களை மின்வாரியத்தில் பணி வழங்க வேண்டும். மின்துறையை பொதுத்துறையாக இருக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16ஆவது மாநிலமாநாடு ஆகஸ்ட்17ந் தேதி முதல் 19ந் தேதி வரை நெல்லையில் நடைபெற உள்ளது. இந்த மாநிலமாநாட்டையொட்டி, தொழிலாளி வர்க்கத்தின் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நினைவு ஜோதி பயணத்துக்கு தருமபுரியில் உற்சாக வரவேற்பு நடைபெற்றது. தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு  நடைபெற்ற வரவேற்பு நிகழ்விற்கு மாவட்டத் தலைவர்  டி.லெனின்மகேந்திரன் தலைமை வகித்தார். மாநிலச்  செயலாளர் ரவிக்குமார், மாவட்டச் செயலாளர் பி.ஜிவா,  மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் வெங்கடடேஷ், காளியப்பன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

;