tamilnadu

img

குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்

தருமபுரி மாவட்ட கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, பிப். 5- தருமபுரியில் குடிநீர், சாலைவ சதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ள னர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின், தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் புதனன்று நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை வகித்தார்.  இதில்,வெயிலின் தாக்கம் அதி கரித்துள்ள நிலையில், பல பகுதிக ளில் தற்போதே தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக பல பகுதிகளில் சாலை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாமல் உள்ளது. தற்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றதை அடுத்து,பொதுமக் கள் கோரிக்களை விரைந்து நிறை வேற்றி தர கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, இதற்கு தேவையான நிதியை, பெற்று தர வேண்டும்.

மாவட்ட ஊராட்சிகுழு கூட்டத் தில் அனைத்து அரசுத்துறை அலுவ லர்களும் கலந்து கொள்ள வேண்டி யது அவசியம். ஆனால், முதல் கூட் டத்துக்கே, பெரும்பாலான அரசு அலுவலர்கள் பங்கேற்கவில்லை. இதனால், கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகள், தேவை களை, அவர்களது கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் வரும் கூட்டங்களில், அனைத்து அரசுத்துறை அலுவலர்க ளும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க தேவையான நிதியை பெற்று தர நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன், அனைத்து பகுதிகளுக் கும் நிதி ஒதுக்கப்படும் என யாசோதா மதிவாணன் தெரிவித் தார். முன்னதாக, பணியாளர்கள் ஊதியம், மாவட்ட ஊராட்சி அலு வலகம் வண்ணம் பூசியது உட்பட பல்வேறு செலவினங்களுக்குள், கவுன்சிலர்களிடம் இருந்து ஒப்புதல்  ெபறப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் சோழன், கண்காணிப் பாளர் சங்கர், புள்ளியில்துறை அலு வலர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.