கோவை, ஆக.31- சமூக நீதிகட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூரை அடுத்த சித்தநாயக்கன் பாளையம் பகுதியில் கடந்த புதனன்று (ஆக.28) சமூக நீதிக்கட்சி சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் நடை பெற்றது. இதில் அக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, சுல்தான்பேட்டை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பன்னீர்செல்வம் உள்ளிட்ட 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து சனியன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சமூக நீதி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநகர மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில் பெண்கள் கைக்குழந்தைகளு டன் கலந்து கொண்டனர். மேலும், கைது செய்யப்பட்ட வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பினர்.இதைய டுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 37 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை பந்தய சாலை காவல்துறையினர் கைதுசெய்தனர்.