திருப்பூர், செப். 16 – திருப்பூர் மாவட்டம், குடிமங் கலம் ஒன்றியம், ஆமந்தங்கடவு என்ற கிராமத்தில் 300 ஏக்கர் சூரியஒளி மின்களம் அமைப்ப தால் விளைநிலங்கள், நீர்வழித் தடம் என மொத்த கிராமமும் பாதிக்கப்படுவதாகும், இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆதார் அட்டையை ஒப்படைப்பதாக கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரகத்தை திங்க ளன்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து ஆட்சியரகத் திற்கு வந்த கிராம மக்கள் கூறிய தாவது: ஆமந்தங்கடவு கிராமத் தில் வாட்சன் சோலார் பிளான்ட் என்ற நிறுவனத்தின் மூலம் 300 ஏக்கரில் மிகப்பெரிய சூரியஒளி மின்களம் அமைக்கப்படுகிறது. இதற்காக பிஏபி நீர்வழிப் பாதை, விவசாய விளைநிலம், வண்டிப் பாதை என பலவற்றையும் நிரவி சமப்படுத்துகின்றனர். விளை நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் படுகின்றன. எனவே இந்த கிரா மத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இப்பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து ஏற்கெனவே ஆட்சியர கத்தில் நான்கு முறை மனுக் கொடுத்திருக்கிறோம். கடந்த சுதந்திர தினத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் இதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற் றிக் கொடுத்தோம். எனினும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. விவசாயம் செய்ய முடியாமல் கிராமமே வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. தனி யார் நிறுவனம் வாழ்வதற்காக இதைச் செய்கின்றனர். எனவே ஆதார் அட்டையை ஒப்படைக்க வந்தோம் என்று கூறி ஆட்சியரக குறை தீர்க் கூட்டம் நடக்கும் பகுதியில் முற்றுகையிட்டு அமர்ந் தனர்.
குடிநீரின்றி தவிப்பு
அதேபோல் பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை சில மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோ கம் செய்யப்படுகிறது. இதனால் 10 குடங்கள் கூட குடிநீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். தனியாரிடம் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று புகார் தெரிவித்தனர்.
மதுக்கடைக்கு எதிர்ப்பு
திருப்பூர் மாநகராட்சி வாவி பாளையம் பகுதியில் புதிய மது பானக் கடை திறப்பதை எதிர்த்து ஊர்ப் பொது மக்கள், பொது நல அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட் சியரிடம் கோரிக்கை மனு அளித் தனர். 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வரும் பகுதி யில் மதுபானக் கடை திறக்க அனுமதிக்க கூடாது என்று அதில் கேட்டுக் கொண்டனர். அதேபோல் காங்கயம் வட் டம் நிழலி வாரச் சந்தையில் 20 ஆண்டுகளுக்கு மேல் மாட்டி றைச்சி, பன்றிக் கறிக் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரு வோர் ஆட்சியரிடம் மனு அளித்த னர். மேற்படி இறைச்சிக் கடை நடத்த ஆட்சியர் ஒப்புதல் அளித் தும், சிலர் கடை நடத்தவிடாமல் தடுப்பதாகவும், நிழலி வாரச் சந் தையில் இறைச்சிக் கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.