கோவை, நவ. 5- கோவை சிங்காநல்லூரில் பொதுமக்கள் சாக்கடைக் குழிகளுக்குள் இறங்கி தண்ணீர் பிடிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது கங்குவான் வீதி 2. இப்பகுதி யில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொது மக்கள் ஆழ்துளை குழாய் நீரை பிடிப்பதற்காக மாநகராட்சியால் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சாலையை ஒட்டிய சாக்கடை குழிகளுக் குள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழாயில் குடங்களை கொண்டு தண்ணீர் பிடிக்க முடியாத நிலையில், சாக்கடைக் குழிகளுக்குள் இறங்கி சிறிய வாளிகளைக் கொண்டு பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், இந்த அவலம் கடந்த பல மாதங்களாக இருந்து வருகிறது. இவ்வாறு வரும் தண்ணீரும் ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் மூன்று குடம் தான் கிடைக்கும். இத்தண்ணீரும் இல்லை யென்றால் ஒன்னரை கிலோ மீட்டர் வரை நடந்து அடுத்த ருக்கும் வீதியில்தான் தண்ணீர் பிடித்து வரவேண்டும். இதுகு றித்து பலமுறை மாநகராட்சியிடம் தெரியப்படுத்தியும் எவ்வித பலனும் இல்லை. இதனாலேயே அசுத்தமான தண்ணீர் என்றாலும் வேறு வழியின்றி பிடித்து பயன்படுத் துகிறோம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.