கோவை, அக். 17- ஆனைமலை அருகே மகளுக்கு பாலி யல் தொல்லை அளித்த தந்தை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி யினர் பொள்ளாச்சியை அடுத்த ஆனை மலை பகுதியில் தங்கி தென்னை நார் உரிக் கும் பணி செய்து வந்துள்ளனர்.
இத்தம்பதி யினருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இந் நிலையில், சிறுமியின் தந்தை, மகள் என்றும் பாராமல் சிறுமியை பாலியல் ரீதியில் துன்பு றுத்தி வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமி யின் தாய்க்கு தெரியவந்தும் தனது கண வரை கண்டிக்காமல் உடந்தையாக இருந் துள்ளார்.
இது குறித்து சைல்டு லைன் மூலம் சிறுமி அளித்த புகாரின் பேரில் ஆனை மலை காவல் துறையினர் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணையானது கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வெள்ளி யன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் சிறு மியை பாலியல் துன்புறுத்தல் செய்த தந் தைக்கும், அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயி ரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தர விட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறு மிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் மகளிர் நீதிமன்ற நீதி பதி ராதிகா தீர்ப்பளித்தார்.