tamilnadu

img

ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திடுக - மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

பொள்ளாச்சி, மார்ச் 15- பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரி , தமிழக துணை சபாநாய கர் பொள்ளாச்சி ஜெயரமானுக்கு மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது . கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது ஆச்சிப்பட்டி ஊராட்சி. இக்கிராமத்தைச் சுற்றி சங்கம்பாளையம், குரும்பபாளையம், குள்ளக்காபாளையம், பனிக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், களத்துப்புதூர், அர்த்தநாரிபாளையம், ஜீவா நகர், போஸ் டல் காலனி உள்ளிட்ட ஏராளமான குக்கிரா மங்களும், 12 வார்டு பகுதிகளும் உள்ளது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிக விபத்து களும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதா னவர்கள் என அனைவரும் சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையினை நாடவேண்டிய சூழல் உள்ளது.  எனவே கிராம  பொதுமக்கள் நலனை  கருத்தில் கொண்டு, விரைவாக ஆச்சிப்பட்டி  பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தரக்கோரி வேண்டி வெள்ளி யன்று, ஆச்சிப்பட்டி பகுதிகளில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.   இதனைத்தொடர்ந்து, கையெழுத்துகள்  பெறப்பட்ட மனுவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆச்சிப்பட்டி கிளை  சார்பில் ஞாயிறன்று தமிழக துணைச் சபா நாயகர் பொள்ளாச்சி வி.ஜெயரமானிடம் நேரில் அளிக்கப்பட்டது. இதில் ஆச்சிப் பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கிளைச் செயலாளர் எம்.கணேசன், உறுப்பி னர் முருகேசன், லோகநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.