கோவை, ஜூலை 8– தலித் மக்களின் பயன்பாட்டிற் காகக் கட்டப்பட்ட சமூதாயக் கூடத்தை வேறு பயன்பாட்டிற்கு அரசே ஆக்கிரமித்திருப்பதாகக் குற்றம் சாட்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மார்க் சிஸ்ட் கட்சியினர் மனு அளித்த னர். கோவை மாநகராட்சி 17ஆவது வார்டுக்குட்பட்ட வடவள்ளி பகுதி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மற்றும் இதர ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகள் உள் ளன. இம்மக்களின் வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தை நாட வேண்டியுள்ளது. இதில் கடுமை யான வாடகை இருப்பதால் கட்ட ணத்தை செலுத்த முடியாத மக்கள் வீடுகள் மற்றும் கோவில்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இதனையடுத்து இப்பகுதியில் சமூதாயக்கூடம் கட்டப்பட வேண் டும் என சிபிஎம் உள்ளிட்ட பல் வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து வடவள்ளி பேரூராட்சியாக இருந்தபோது அண்ணா மறுமலர்ச்சி திட்டத் தின் கீழ் 2011 ஆம் ஆண்டு 25 லட் சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு 2014 ஆம் ஆண்டு சமூதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் எந்த நோக்கத்திற்காக இந்த சமூதாய கூடம் கட்டப் பட்டதோ அதன் நோக்கம் இன்றுவரை நிறைவேற்றப்பட வில்லை. ஆரம்பத்தில் அரசின் இலவச தையல் பயிற்சி மையமாகவும், பின்னர் வடவள்ளி காவல் நிலையமாகவும் செயல்பட்டு வந்தது. தற்போது ஆரம்ப சுகா தார நிலையம் செயல்பட்டு வருகி றது. தொடர்ந்து அரசின் பிற துறைகள் ஆக்கிரமித்து வருவ தால் தலித் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்காக கட் டப்பட்டதன் நோக்கம் இன்று வரை நிறைவேறவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இந்த சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்படுத்தும் சமுதாயக்கூடமாகவே செயல்படு வதற்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டா முத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் மணி, காளப்பன், முருகன், பழனிசாமி, இருதயசாமி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி யின் நிர்வாகிகளும், அப்ப குதி பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக வடவள்ளி பகு தியில் நூற்றுக்கணக்கானோரிடம் சமூதாயக்கூடமாக தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.