tamilnadu

img

கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை பொருட்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

 கோபிசெட்டிபாளையம், செப்.29- கோபிசெட்டிபாளையத்தில் கர்ப்பிணி பெண்க ளுக்கு சீர் வரிசை பொருட்களை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கி சிறப்புரையாற்றினார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பெண் ஊழியர் கள் வளையங்கள் அணிவித்து, சந்தனம் மற்றும் குங்கு மங்களை கொண்டு நலுங்கு வைத்தும் வெகு சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில் பங்கேற்ற 280 கர்ப்பிணி பெண்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் துறை அதிகரிகள் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

;