பொள்ளாச்சி, ஜூலை 17- பொள்ளாச்சியில் அரசு கட்டுப்பாடுகளை மீறி தனி மனித இடைவெளியின்றி மாணவர் சேர்க்கை நடத்திய தனியார் கல்லூரிக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வியாழனன்று 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் திடீரென வெளியிடப் பட்டது.
இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை தங்களது கல்லூரிகளில் சேர்க்கும் பணியில் தனியார் கல்லுரி கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் இயங்கி வரும் நாச்சி முத்துகவுண்டர் மகாலிங்கம் கல்லூரி என்ற தனியார் கல்லூரி நிர்வாகம் கொரோனா தொற்று காலத்தில் அரசின் எவ்வித கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை வரவழைத்து மாணவர் சேர்க்கை யில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர், கல்லூரி நிர்வாகத்தை எச்சரித்ததுடன், கதவை மூடி சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.