சிதம்பரம், மார்ச் 7- அண்ணாமலை பல்கலை கழக பொறியியல் புல மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையில் கவுரவிக்கப்பட்ட அறிவியலாளர்களின் ஆய்வு கட்டுரைகளை, நுணுக்க மான கருத்துகளை மாண வர்கள் மத்தியில் வெளிக் கொணர்வதற்கான விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முருகேசன் தொடங்கி வைத் தார். இதில் சிறப்பு விருந்தின ராக அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு செயற்கை கோள்களின் செயல்பாடு மற்றும் சமீபத்திய வளர்ச்சி பற்றி எளிய முறையில் மாண வர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் தகவல் தொடர்புத் துறை மாணவர்கள் படிப்பை முடித்து அவர்கள் எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும், செயற்கைகோள் அனுப்பு வது எவ்வாறு அதன் பணி கள் எப்படி வகைபடுத்தப்படு கிறது. விண்வெளியில் செலுத் தப்படும் செயற்கைகோள் கள் திரும்பப் பெறப்படுமா என்ற மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். முன்னதாக முனைவர் ரகுகாந்தன் வரவேற்றார். பதிவாளர் கிருஷ்ணமோ கன், மின்னணு மற்றும் தக வல் தொடர்பு பொறியியல் துறையின் தலைவர் யமுனா, அறிவியல் புல முதல்வர் கபிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.