tamilnadu

img

மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி சேலம் சிவராஜ் சித்த மருத்துவ கல்லூரி முற்றுகை

சேலம், ஆக. 26-  சேலத்தில் செயல்பட்டுவரும் பிரபல சித்த மருத்துவக் கல்லூரியான சிவராஜ் சித்த மருத்துவ கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், சிவதாபுரம் அருகில் உள்ள சிவராஜ் சித்த மருத்துவ கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரி யில் படிக்கின்ற மாணவர்களிடம் கல்லூரி யில் சேரும்போது ரூ.30 ஆயிரம் இருப்புத் தொகையாக பெறப்பட்டுள்ளது. கல்லூரி  பயிற்சி காலம் முடிந்தவுடன் இந்தத் தொகை  திருப்பித் தரப்படும் என்ற உத்தரவாதத் துடன் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை யும் கொடுத்துள்ளனர். ஆனால், தற்போது இந்தத் தொகையை வழங்க கல்லூரி நிர் வாகம் மறுத்துள்ளது. இதனை கண்டித்து கடந்தாண்டு கல் லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவி கள் சுமார் 80க்கும் மேற்பட்டோர் திங்க ளன்று கல்லூரியில் சென்று முறையிட் டனர். அப்போது, இந்த தொகையை தர முடியாது எனவும், நீங்கள் நீதிமன்றத்தை நாடி முடிந்தால் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் கல்லூரி நிர்வாக தரப்பில் கூறப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களும், பெற் றோர்களும் கல்லூரியின் நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன்பின்னர், இரும்பாலை காவல் துறையினர் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் மாணவர்க ளுக்கு வழங்க வேண்டிய பணத்தை கல் லூரி நிர்வாகம் திரும்பத் தரப்படும் என்ற உத்தரவாதத்தை அடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற் றோர்களும், மாணவர்களும் கலைந்து சென்றனர்.