சேலம் ரயில்வே கோட்டத்தில் இ-ஆபிஸ் நடைமுறை அமல்
சேலம், மார்ச் 20- சேலம் ரயில்வே கோட்டத்தில் இ- ஆபிஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திரு வனந்தபுரம் ஆகிய 5 ரயில்வே கோட்டங் களில் பேப்பர் பயன்பாட்டை குறைக்கும் வகையில், இணைய வரி அலுவலக நடை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ- ஆபிஸ் நடைமுறையை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் தொடங்கி வைத்தார். தெற்கு ரயில்வேயில் ஏற்க னவே வெற்றிகரமான முறையில் இ- ஆபிஸ் செயல்படுத்தி வருகிறது. இந்த அலு வலகம், திருச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்து துறைகளில் பணி புரியும் 7882 பணியாளர்கள் இ-ஆபிஸ் நடைமுறையின் கீழ் வந்துள்ளனர். இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் கூறுகையில், தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான பணிகளை இ-ஆபிஸ் முறை அமல்படுத்தியுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் 878 பணி யாளர்கள் இ-ஆபிஸ் நடைமுறையின் கீழ் வந்துள்ளனர். இதன்மூலம் ரயில்வே கோட்ட அலுவலகம் பேப்பர் அல்லாத இ- அலுவலக நடைமுறைக்கு மாறியுள்ளது. இதனால் நம்பகமன, திறமையான, பய னுள்ள முறையில் அலுவலக கோப்புகள், ஆவணங்களை முற்றிலும் கண்காணிக்க முடியும். கோப்புகளை நிலுவை இல்லாமல் விரைந்து இ-ஆபிஸ் முறை மூலம் விரை வான அலுவல் சேவையை உறுதி செய்யப் படும். இதன் மூலம் பேப்பர் பயன்பாட்டை குறைக்க முடியும். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் எதிரொலி: எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
சேலம், மார்ச் 20- கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக சேலம் வழியாக செல்லும் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ளது. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், தியேட் டர்கள் மூடப்பட்டுள்ளன. இதே போல் ரயில்வே நிர்வாகம் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக 168 ரயில்களின் 300க்கும் மேற் பட்ட சேவைகளை ரத்து செய்யப் பட்டுள்ளன. இந்த ரயில்கள் 20 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், சேலம் வழியாக செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்த புரம் எக்ஸ்பிரஸ், கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், ஜபல்பூர் எக்ஸ் பிரஸ் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை சென்ரல்-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (12243) 20 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12244) ரயிலின் சேவை 30ஆம் தேதி வரை ரத்து செய்யப் பட்டுள்ளது. திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் (12698) சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் 22ஆம் தேதி மற்றும் 29ஆம் தேதிகளில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - திருவனந்த புரம் எக்ஸ்பிரஸ் (12697) ரயில் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மங்களூர்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22609) ரயில் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும். கோவை-மங்களூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் (22610) ரயில் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சேவைகள் ரத்து செய்யப் படும். ஜபல்பூர்-கோவை சிறப்பு ரயில் (02197) 23ஆம் தேதி சேவை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாதுகாப்பு கவசங்கள் வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பென்னாகரம், மார்ச் 20- பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்து வர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம் மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புறநோயாளிகவும், உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகள் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. மேலும் ஒகேனக்கல் கர்நாடக மாநில எல்லைப் பகுதி யில் அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ஒகேனக்கலுக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங் களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். மேலும் பென்னாகரம் வட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தினக் கூலிகளாக வேலை செய்து வரு கின்றனர். இதேபோல் கேரளாவிலும் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக வீடு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்படு வதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கப்பட வில்லை. எனவே, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாது காத்து கொள்வதற்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும். வெளி மாநிலங்கள் சென்று திரும்பியவர்களுக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரியில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்
தருமபுரி, மார்ச் 20- தருமபுரியில் போதிய வருவாய் இல்லாத தால் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில் தருமபுரி நகரம், புறநகர் மற்றும் அதியமான் கோட்டை, பென்னா கரம், பாலக்கோடு, பொம்மிடி, அரூர், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட 14 பணி மனைகள் உள்ளன. இப்பணிமனை களிலிருந்து 960 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகள் இல்லாததால் பேருந்துகள் காலி யாக செல்கிறது. இதனால், போதிய வரு வாய் இல்லாததால் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. மேலும், கர்நாடகவிற்கு செல்லும் 25 பேருந்துகளும் நிறுத்தப்பட் டுள்ளது.