tamilnadu

சேலம் முக்கிய செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து

சேலம், அக். 21- சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறையினர் எச்சரித்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, நாகர்கோவில், கன்னியா குமரி, திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பதி, ராமேஸ்வரம், திருச்சூர், எர்ணாகுளம், குருவாயூர், திருவனந்தபுரத்திற்கு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் விரைவு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு டிக்கெட் கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்தது. விரைவு பேருந்தில் இடம் கிடைக்காதவர்கள், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமை யாளர்கள் முன்பதிவு டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்றால் அந்த பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித் துள்ளது.  இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 ஆம்னி பேருந்துகள் தினசரி பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த முன்பதிவு டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது.அவ்வாறு விற்பது தெரிய வந்தால் அந்த பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு ரூ.2.50 லட்சம்

அபாரதம்

சேலம், அக்.21- சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படு வதாக மாநகராட்சி ஆணை யருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமை யிலான குழுவினர் ராஜ கண பதி கோவில் அருகிலுள்ள லாலா ஸ்வீட் கடை குடோ னில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய் வின் போது கடையின் குடோ னில் ரூ.4 லட்சத்து 50 ஆயி ரம் மதிப்பிலான 3 டன் பிளாஸ்டிக் பைகள் வைத்தி ருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிளாஸ்டிக்  பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் லாலா ஸ்வீட் கடையின்  உரிமையாளருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபா ரதம் விதித்தனர்.

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு சென்றால் நடவடிக்கை தெற்கு ரயில்வே எச்சரிக்கை

கோவை, அக். 21- ரயில்களில் பட்டாசுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய ரயில்வே சட்டப்படி, ரயில்களில் பட்டாசுகள், எரிவாயு சிலிண்டா், அமிலம், பெட்ரோல் உள்ளிட்ட ஆபத்து விளை விக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது தடை செய் யப்பட்டுள்ளது. மேலும் இவற்றை கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு இந்திய ரயில்வே சட்டம் 1989-இன் படி 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்வதைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ரயில்வே காவல்துறை அதிகாரிகளுக்கு, தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதில் பட்டாசுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்லும் பயணிகளைக் கண்காணித்து, அந்தப் பொருட் களைப் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட பயணி மீது நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடா்பாக 182 என்ற இலவச அழைப்பு எண்ணிலும் தொடா்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.