tamilnadu

விகடன் தொழிலாளர்கள் வேலை நீக்கம்

விருதை திருப்பி அனுப்பிய நூலாசிரியர் செ.நடேசன்

திருப்பூர், மே 25- விகடன் நம்பிக்கை விருது 2017 -ஐ வருத்தத்துடன் திருப்பி அனுப்புவதாக சிறந்த மொழிபெயர்ப்பு நூலாசி ரியர் செ.நடேசன் கூறியிருக்கிறார். தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப் பின் முன்னாள் பொதுச் செயலாளரான செ.நடேசன், இது குறித்து ஆனந்தவிகடன் நிர்வாகத்துக்கு அனுப்பிய மின் னஞ்சலில் குறிப்பிட்டிருப்பதாவது, இன்றைய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தொழிலாளர்களைப் பாது காக்க வேண்டிய தருணத்தில் விகடன் நிர்வாகம் 176 தொழி லாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது கவலை அளிக்கி றது. தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட உரி மைக்குரல் எழுப்ப வேண்டியது பத்திரிகைகளின் கடமை ஆகும். ஆனால் விகடன் நிர்வாகத்தின் செயல் இதற்கு மாறாக உள்ளது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. எனவே, 2017 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை நூலாக நான் தமிழாக்கம் செய்த ‘கஷ்மீரி தேசி யத்தின் பல்வேறு முகங்கள்’ -ஐ தேர்வு செய்து, சென்னை யில் நடத்திய விழாவில் எனக்கு வழங்கிய விகடன் நம் பிக்கை விருதைத் திருப்பி அனுப்புகிறேன் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக் கிறார்.

;