tamilnadu

அபாயகரமாக காட்சியளிக்கும் சாலை

கோவை, அக். 31- கோவை இந்திரா கார் டன் சாலையில் தோண்டப் பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் பகுதியில் இராமானுஜ நகரை அடுத்து அமைந் துள்ளது இந்திரா கார்டன் சாலை. இப்பகுதியில் மின் விநியோக பணிக்காக சாலை முழுவதும் பள்ளங் கள் தோண்டப்பட்டன. அப்பணிகள் முடிந்து பல நாட்களாகியும் இன்றுவரை தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்பட வில்லை. இதனால் அப்பள் ளங்களில் வாகன ஓட்டிகள் சிக்சி படுகாயமடைவது அன்றாட நிகழ்வாக மாறி யுள்ளது. ஆகவே, அபாயக ரமாக காட்சியளிக்கும் இச்சாலையை உடனடி யாக சீரமைக்க வேண்டு மென அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்ற னர்.