இளம்பிள்ளை, மார்ச் 18- இளம்பிள்ளை அருகே தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை பேரூராட்சிக் குட்பட்ட சந்தப்பேட்டை பகுதியில் உள்ள ரேசன் கடை முன்பு மினி வாட்டர் டேங்க் உள்ளது. இதன் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த கழிவுநீரில் கொசுக் கள் உற்பத்தியாகி வருகின்றது. மேலும் பல்வேறு தொற்று நோய் பரப்பக் கூடிய புழுக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ரேசன் கடை, உழவர் சந்தைக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இதன் அருகில் குடியிருப்புகள் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையினரும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் வாட்டர் டேங்க் அருகில் தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.