திருப்பூர், ஜூன் 3 -ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான மு.சுப்பிரமணியத்தை பணி நிறைவு பெறும் நாளில் பழிவாங்கும் நோக்கத்துடன் பணி சீக்கம் செய்ததமிழக அரசைக் கண்டித்து திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்களன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.அம்சராஜ் கண்டன உரையாற்றினார். மேலும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் ஜெயலட்சுமி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் து.ராஜகோபால், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலப் பொருளாளர் எம்.பாக்கியம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ரமேஷ் நிறைவுரை ஆற்றினார்.இதில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள், அலுவலர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்ண்டனர். நிறைவாக அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.