அவிநாசி, ஜூலை 5- அவிநாசி அடுத்த தெக்கலூர் ஊராட்சியில் உள்ள ஏடிகாலனியில் அரசு மூலம் கட்டப்பட்ட வீடுகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால், குடியி ருப்புவாசிகள் நிவாரணம் கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சியில் உள்ள காந்திநகர், காம நாயக்கன்பாளையம், திம்ம ணையாபாளையம் பகுதி களில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராகாந்தி குடியிருப்பு திட்டத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளுக்கு பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் நிவாரணம் கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர். இதேபோல் அவிநாசி ஒன்றியத்திலுள்ள அவிநாசிலிங்கம் பாளையம் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் கேட்டபோது, பழுதடைந்த வீடுகளுக்கு நிவாரணம் அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த நிவாரணம் குறைந்தளவு வீடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. இந்த நிவாரணம் வழங்கும் திட்டம் தற்போது முடிவடைந்து விட்டது என தெரிவித்தார்.