tamilnadu

img

சாலையை சீரமைக்க கோரிக்கை

அன்னூர், டிச.14- அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீர மைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். அன்னூர் ஒன்றியம், ஒட்டர்பா ளையம் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இங்குள்ள அள்ளிகாரபாளையம் முதல் மேட்டுப்பாளையம் வரை  இருபது ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை  அமைக்கப்பட்டது. தற்போது அச்சாலை  மிகவும் மோசமாக நிலையில் காணப் படுகின்றது. இதனால் பள்ளிக்குழந்தை கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின் றனர். இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.  இதேபோல் ஒட்டர்பாளையம் முதல் அய்யம்பாளையம் வரை உள்ள சாலையோரமாக புதர் மண்டிய நிலை யில் உள்ளது. இதனால் சாலையில் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அல்லிகபள்ளி பாளையம், ஒட்டர் பாளையம், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாக சாக்கடைகள் துர்வாரப்படாமல் கழிவுகள்  தேங்கி சுகாதார சீர்கேட்டு மையமாக மாறி வருகிறது.  இதேபோல், தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஆகவே, இப்பகுதிகளில் தார்ச்சாலை, சாக்கடை உள்ளிட்ட வசதிகளை உடனடியாக ஏற்படுத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.