tamilnadu

img

உடைந்த குடிநீர் குழாயைச் சீரமைக்க கோரிக்கை

கோவை, அக். 15- கோவை விளாங்குறிச்சி பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், விளாங்குறிச்சியை அடுத்த வி.கே.ஆர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 15 நாட்க ளுக்கும் மேலாக சாலை முழுவதும் நீர் வழிந்தோடி வருகிறது. இப்பகுதி சரவணம்பட்டி மற்றும் சக்தி சாலை களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இச்சாலையில் பயணித்து வருகின் றனர். இத்தகைய சூழலில் சாலை பள்ளங்களில் நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் அபா யம் இருந்து வருகிறது. ஆகவே, குழாய் உடைப்பை சரி செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.