அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், பிப். 24- சாதிப் பெயரைச் சொல்லி திட் டும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி பொறுப்பு முதல்வரை மாற் றம் செய்யக்கோரி, மாணவியர்கள் பயிற்சிப் பள்ளி முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் ஒன்றியம், மாணிக்கம் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கடந்த ஏழு வருடங்களாக அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி செயல்பட்டு வரு கின்றது. இப்பள்ளியில், இரண் டாம் ஆண்டில் 50மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பொறுப்பு முதல்வராகவும், தாய் சேய் நல அலுவலராகவும், விடுதி காப்பாளராகவும் பணிபுரிந்து வரு பவர் பேபி. இவர் மாணவியர்க ளிடம் தொடர்ந்து சாதிப் பெயரை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசு வதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்துவதாகவும், விடுதியில் பயிலும் மாணவியர்க ளின் துணிபைகளை திடீரென சோதனை செய்வதாகவும், இது குறித்து முறையிட்டால் செய் முறை தேர்வில் மதிப்பெண் குறைத்து தோல்வி அடைய செய்து விடுவதாக மிரட்டி வரு வதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே, அவரை பணிமாறுதல் செய்யக்கோரி ஞாயிறன்று மாண வியர்கள் பயிற்சிப்பள்ளி வளாகத் தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து, எலச்சிபா ளையம் வட்டார மருத்துவஅலு வலர் கருணாகரன், சுகாதார உதவி இயக்குனர் நக்கீரன் ஆகி யோர் மாணவியரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பி னும், மாணவிகள் சமாதானமா காத நிலையில், மாவட்ட சுகாதார பணிகள் துணைஇயக்குனர் சோம சுந்தரம் பொறுப்பு முதல்வர் பேபியை பணியிடை மாற்றம் செய்கிறேன் என உறுதியளித்தார். இதன் அடிப்படையில், மாணவி யர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதி யில் சிறிது நேரம் பெரும் பரபரப் பான சூழல் நிலவியது.