tamilnadu

img

வன உரிமைச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெறுக

ஆனைமலை, ஜூலை 22- வன உரிமைச் சட்ட திருத் தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று  ஆனைமலை வட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2006 வன உரிமைச் சட்டத்தை திருத்தம் செய்து சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் முயற்சியை மத் திய அரசு கைவிட்டு, முழுமை யாக நடைமுறைப்படுத்த வேண் டும். மலைவாழ் மக்கள் அனை வருக்கும் கேரள மாநிலத்தைப் போல புதிய தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும். மின்சாரம், கழிப் பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் ஏற்படுத்தித்தர வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.பரம சிவம் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செய லாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிசாமி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றி னர்.  இப்போராட்டத்தில் சங்கத் தின் ஆனைமலை தாலுகா தலை வர் ஏ.அம்மாவாசை மற்றும் செயலாளர் கே.பத்மினி உள் ளிட்ட 150 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.