சிபிஎம், விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
உதகை, நவ.5- கூடலூர் அருகே உள்ள சேரன் நகர் பாலத்தை போர்க்கால அடிப் படையில் சீரமைப்பு செய்திட வேண்டும் என வலியுறுத்தி ஓவேலி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை, சீபுரம் உள் ளிட்ட கிராமங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக கடுமையான பதிப்புக்கு உள்ளானது. அப்போது சேரன் நகர் பாலம் முற்றிலும் சேத மடைந்ததால் போக்குவரத்து முற்றிலு மாக தடைப்பட்டது. இதனால் எல்ல மலை, சீபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து வசதியின்றி மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அவசர நேரங்களில் மருத்துவ வச திக்கு கூட 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அவலநிலைக்கு தள்ளப் பட்டனர். இதுகுறித்து அதிகாரி களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் ஓவேலி பேரூராட்சி நிர்வாகம் இங்குள்ள வீடுகளை இடிப் பதற்காக நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளது. எனவே சேரன் நகர் பாலத்தை போர்க்கால அடிப்படை யில் சீர் செய்திட வேண்டும். வீடுகளை இடிப்பதற்காக போடப்பட்ட சட் டத்தை திரும்பப் பெற வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி செவ்வாயன்று ஓவேலி பேரூ ராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட லூர் இடைக் கமிட்டி செயலாளர் எம்.ஏ. குஞ்ஞி முகமது தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.வாசு துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் கூட லூர் இடை கமிட்டி செயலாளர் என். கோபிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகா தேவன், காங்கிரஸ் கட்சியின் ஓவேலி வட்ட தலைவர் இபினு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் ஓவேலி வட்ட தலை வர் ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்துகொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.