கோவை, மே 21- அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நலவாரியத்தின் பணப்பயன்களை வழங்குவதுடன், மீண்டும் ஆட்டோக் களை இயக்க அனுமதி அளிக்கக்கோரி பி.ஆர்.நடராஜன் எம்.பி., உள்ளிட்டோர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவார ணம் வழங்க வேண்டும். ஆட்டோக்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்க வேண்டும். ஆட்டோ மற்றும் மோட்டார் தொழி லாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்திருந்தாலும், செய்யா விட்டாலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இழந்திருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தக்கோரி வங்கி நிர்வா கங்கள் நெருக்கடி அளிப்பதை நிறுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் அவசர தேவைக்காக தவிர்க்க முடியாமல் இயக் கப்பட்ட ஆட்டோக்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை காவல்துறை அபராதம் விதித்திருப்பதை ஏற்கமுடியாது.
ஆகவே, உடனடி யாக அந்த வழக்குளை திரும்பப் பெறுவதோடு, ஆட்டோக் களை ஓட்டுநர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று தமிழ கம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம், அனைத்து ஆட்டோ கூட்டுக்கமிட்டியின் தலைவர் பி.கே.சுகுமாறன், செயலாளர் வணங்காமுடி உள்ளிட்ட சிஐடியு, ஏஐடி யுசி, எல்பிஎப், எம்எல்எப், எஸ்டிடியு உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
திருப்பூர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வ நாதன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் சுகுமாரன், ஜெயக்குமார் மற்றும் சிவராமன், எஸ்.அருண் உள்பட மோட்டார், ஆட்டோ தொழிலாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.