தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
ஈரோடு, நவ. 19- பஞ்சமி நிலத்தை மீட்டு உரியவர்க ளுக்கு வழங்க வேண்டும் என தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தலித் ஒடுக்கு முறை எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் அந்தியூர் வட்டார கோரிக்கை மாநாடு செவ்வாயன்று அந்தியூரில் நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு அந்தியூர் தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி தலைமை வகித்தார். தாலுகா பொரு ளாளர் டி.ராஜா வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் யூ.கே. சிவஞானம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் எம். அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மாணிக்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துசாமி, பி.பி.பழனிசாமி, அந்தி யூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகே சன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தாலுகா செயலாளர் டி.சாவித்திரி, விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகர் அணி இணைச் செயலாளர் ஜி.ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய செயலாளர் கு.பிரபு ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில், ஈரோடு மாவட்ட காவல்துறை உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதித்து சாதிய மறுப்பு தம்பதியினர் பாதுகாப்பு சிறப்புப் பிரிவை உடனே ஏற்படுத்த வேண்டும். வன்கொடுமை யால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்காமல் ஆதிக்க சாதியின ருக்கு ஆதரவாக நடந்து கொள்வதை கைவிட வேண்டும். பட்டியலின மக்கள் பாதுகாப்பு விழிக்கண் குழுவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும். எஸ்சி, எஸ்டி துணைத் திட்ட நிதியில் பயிலும் கல்லூரி மாணவர்களை கட்டணம் கேட்டு கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும். அந்தியூர் பகுதியில் பட்டியலின மக்கள் மேம்பாட்டிற்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு, உரியவர்க ளுக்கு வழங்க வேண்டும். நிலமற்ற ஏழை மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம், வீட்டுமனை பட்டா உடனே வழங்க வேண்டும். அந்தியூர் மந்தை மாரி யம்மன் கோவில் மக்கள் 9 பேருக்கு பட்டா வழங்கியது போல் மீதமுள்ள 23 குடும்பங்களுக்கும் விரைவாக பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
இதைத்தொடர்ந்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி நிறை வுரையாற்றி பேசுகையில், தலித் பெண்கள் கொலை செய்யப்படுவதும், வன்புணர்வு செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகள் உட்பட அனைத்து வயது பெண்களும் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள். இதனை எதிர்த்து தொடர்ந்து தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குரல்கொடுத்து வருகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில், சேலம் ராஜலட்சுமி கொலை, அரியலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி நந்தினி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது என தொடர்ந்து பல படுகொலைகள் நடந்துள்ளது. அவர்க ளுக்கு நீதி கிடைப்பது என்பது குறை வாகவே இருந்தது. அவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு வெகுஜன அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்ட தன் விளைவாகவே கொலை செய் யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருக் கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, தலித் சமூ கத்தை சேர்ந்த பெண்கள் பொரு ளாதார ரீதியாகவும் தாக்கப்படுகி றார்கள். அவர்களுக்கு பொருளாதார விடுதலை என்பது தேவை. இவர்களை காப்பதற்கான தனிச் சட்டங்கள் பல உள்ளது. ஆனால் அதனை அரசு அமல்படுத்தவில்லை. அதனை அமல் படுத்தாவிட்டால் இவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. தற்பொழுது, அரசு அதில் கவனம் செலுத்தாமல், வேறு எல்லா வகையிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதேபோல், அருந்ததிய மக்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளை பாது காக்க சிறப்பு சட்டம் வேண்டும் என மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் இந்த ஆட்சியா ளர்கள் ஆதிக்க சாதியினருக்கே ஆதர வாக இருந்து வருகிறார்கள். இதனை முறியடிக்க மாபெரும் போராட் டம் நடத்த வேண்டியுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். முடிவில், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தாலுகா தலைவர் எ.முருகன் நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.