tamilnadu

இராஜபாளையம் மற்றும் சிவகாசி முக்கிய செய்திகள்

ஒருவர் கொலை

இராஜபாளையம், ஜூன் 2- இராஜபாளையத்தை அடுத்துள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் கிரா மத்தில் தனியாருக்குச் சொந்தமான ரைஸ் மில்லில் வேலை பார்த்து வருபவர் கண் ணன். இவரை செவ்வாய்க்கிழமை அதி காலை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். 

நகை, பணம் பறிப்பு  

தேனி, ஜூன் 2- தேனி அருகே உள்ள எஸ்.வாடிப் பட்டி சடையால்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார் (25).இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவ தினத்தன்று நண்பர் ஒருவரைப் பார்க்க தாடிச்சேரிக்கு இருசக்கர வாக னத்தில் சென்றுள்ளார் .வீரபாண்டி -தாடி சேரி சாலையில் கருப்பசாமி கோவில் அருகே சென்ற போது வாகனத்தை மறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அருண் குமார் அணிந்திருந்த 3 பவுன் செயின், ரூ. 25ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல் போன், ரொக்கம் ரூ. 4,00 ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். அருண் குமார் கொடுத்த புகாரின் பேரில் வீர பாண்டி துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர்.

பெண் தற்கொலை 

சிவகாசி, ஜூன் 2- சிவகாசி மின்வாரிய காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், பட்டாசு ஏஜெ ண்டாக உள்ளார். இவரது மனைவி ராஜ ராஜேஸ்வரி (39). இவர்களுக்கு 13 வய தில் மகன் உள்ளார். கடந்த சில நாட்க ளாக கணவன்-மனைவி இடையே தக ராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில், ராஜராஜேஸ் வரி தனது உடலில் தீ வைத்து தற் கொலை செய்யப் போவதாகக் கூறினா ராம். அப்போது அவரது சேலையில் தீ பிடித்துள்ளது. இதையடுத்து கணவர், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிவ காசி அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். திருத்தங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

வாகனங்களை கொடுக்க மறுக்கும் மாற்றுத்திறனாளி அலுவலகம்

திண்டுக்கல், ஜுன் 2- மாற்றுத் திறனாளிகளுக்கு முதலமைச் சர் கொடுத்த வாகனத்தை திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவல கம் கொடுக்க மறுத்து வருகிறது.  கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் லில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி கலந்து கொண்ட அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பைக்குகளை வழங்கினார். அந்த வாக னங்கள் இன்றுவரை மாற்றுத்திறனாளி களுக்கு கொடுக்கப்படவில்லை. வாக னம் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இது குறித்து மாற்றுத்திறனாளி கள் அலவலகத்தில் கேட்டால் ஆர்.சி.புக் வரவில்லை என்று மழுப்பலாக பதில் அளிக்கிறார்கள். 4 மாதங்களாக வாகனம் வழங்காதது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பகத்சிங், மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு கொடுத்துள்ளார். அரசு நட வடிக்கை எடுக்குமா? மாற்றுத்திறனாளி களுக்கு வாகனங்கள் கிடைக்குமா?