அவிநாசி, செப். 25- அவிநாசி ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான நீரோடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதன் காரணமாக புதனன்று பெய்த மழையால் சாலைக ளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிர மத்திற்குள்ளாகினர். அவிநாசி ஒன்றியம் சேவூர், ஆட்டையம்பாளை யம், வடுக பாளையம்,கருவலூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலுள்ள நீரோடைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் புதனன்று அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இந்த மழையால் தண்ணீர் நீரோடையில் செல்ல வழியில்லாமல், சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விசைத் தறி தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலா ளர் ஆர்.பழனிச்சாமி கூறுகையில், இரண்டு நாட்க ளாக கன மழை பெய்து வருகிறது. இப்பகுதியிலுள்ள பெரும்பாலான நீரோடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள் ளது. இதனால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள நீரோடைகளை ஆய்வு செய்து மீட்டு, முறை யான கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.