உதகை,பிப். 28- உதகை சன் மேரீஸ் ஹில் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியிலிருந்து வழிந்தோடும் கழிவுநிரை அகற்ற அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு சன் மேரீஸ் ஹில். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்நடைபாதையில் வழியாக உள்ள கழிவு நீர் தேக்க தொட்டியிலிருந்து கழிவுநீர் கடந்த இரண்டு வாரங் களுக்கு மேலாக வழிந்தோடுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கே டும் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின ரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.