உதகை,பிப்.21- உதகை காந்தள் பகுதியில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை காந்தள் பகுதி 24 வது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இந்நிலையில் இங்கு உள்ள கால்வாயில் குப்பைகள் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், சாக்க டையில் இருந்து எடுக்கப்பட்ட கழிவுகள் அப்புறப்ப டுத்தாமலும் உள்ளது. இதனால் இந்த பகுதியை சுற்றிலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.