tamilnadu

img

நேர்மையான மக்கள் பிரதிநிதிக்கு விருது வழங்கி பொதுமக்கள் பாராட்டு

கோவை, பிப். 10 –  கோவை பெரியநாயக்கன்பாளை யம் ஒன்றியத்திற்குட்பட்ட  நாயக்கன்பா ளையம் ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு “நேர்மையான மக்கள் பிரதிநிதி” என்ற  விருதை ஊர் பொதுமக்கள் வழங்கியுள் ளனர்.   கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட  நாயக் கன்பாளையம் ஊராட்சி உறுப்பினராக ஜெயலட்சுமி (38) என்பவர் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இவர்  பொதுவாழ்வில் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்கிற உறுதியான நிலை பாட்டை கடைபிடித்து வருகிறார். இந்நி லையில் நாயக்கன்பாளையம் ஊராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட  இவரை சமீபத்தில் நடைபெற்ற உதவித் தலைவர் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒருதரப்பினர் பேரம் பேசிய தாக கூறப்படுகிறது. ஆனால், அதனை ஏற்க மறுத்த ஜெயலட்சுமி, பேரம் பேசினவர் தரப்பினரை எதிர்த்தே வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வெகுவாக வைரலாகி இருந்தது.  இதன்தொடர்ச்சியாக, இவரை பாராட் டும் வகையில் கோவை பெரியநாயக் கன்பாளையம் பாரதிநகர் பொதுமக்கள் சார்பாக “நேர்மையான மக்கள் பிரதிநிதி” என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், ஜிம் உரிமையாளர் கருணைபிரபு பங்கேற்று ஜெயலட்சுமிக்கு  விருது வழங்கி கௌரவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் பேரூராட்சி உறுப்பி னர் சிவராஜ் சான்றிதழ் வழங்கினார்.   மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக் கன்பாளையம் ஒன்றிய செயலாளர் என்.பாலாமூர்த்தி பாராட்டி பேசினார். இந்நிகழ் வில் பலர் கலந்து கொண்டனர்.