tamilnadu

img

சிறுமுகை தோழர் விநாயகம் நினைவாக அம்பேத்கர் பயிற்சி மையத்திற்கு மடிக்கணினி வழங்கல்

தாராபுரம், மார்ச் 18 - சிறுமுகை தோழர் விநாயகம் நினை வாக அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்திற்கு மடிக்க ணினி வழங்கப்பட்டது. தாராபுரத்தில் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகி றது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மையத்திற்கு சிறுமுகை தோழர் விநாயகம் நினைவாக, பயிற்சி மைய மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு அவரது மகன் கேஎம்சிஎச் மருத்துவமனையில் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வரும் டாக்டர் லெனின்பாபு மடிக்க ணினி வழங்கினார். மேலும், அவ ரது சார்பாக அவரின் மைத்துனர் மோகன் பயிற்சி மையத்திற்கு நேரில் வந்து மடிக்கணினி வழங்கினார். இதனை பயிற்சி மைய ஒருங்கிணைப் பாளர்கள் ஆசிரியர் குப்புசாமி, சீரங்கராயன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  முன்னதாக, சிறுமுகை தோழர் விநாயகம் சௌத் இண்டியன் விஸ் கோஸ் தொழிற்சாலையில் பணிபு ரிந்து சிஐடியூ நிர்வாகியாகவும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு மக்கள் நல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். இவர் கடந்த மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக் கது.